தடுப்பூசி செலுத்தி சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுளையுங்கள் – இங்கிலாந்து பிரதமர்

கிருஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வீடியோ வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது, “பரிசுகளை வாங்க இன்னும் சில மணிநேரங்கள் இருந்தாலும், உங்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த பரிசுகளை வழங்கலாம். அதுதான் தடுப்பூசி செலுத்துவது. முதல் டோஸ் இரண்டாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸாக இருக்கலாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்றார்.

Translate »
error: Content is protected !!