ரூ.3 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

திருச்சி ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலானது இன்று காலை திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது ரயிலில் பயணிகளின் உடமைகளை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில் 3 பேர் உரிய ஆவணங்களின்றி 3 கோடி மதிப்புடைய தங்கம் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனியார் நகை கடைகளுக்கு  உரிய ஆவணங்கள் இன்றி தங்க நகைகள் இதுபோன்று ரயில் மூலம் கடத்தப்பட்டு வருவது தற்போது தெரிய வந்துள்ளது

 

Translate »
error: Content is protected !!