லண்டனில் 7,500 கோடி மதிப்பிலான புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்

லண்டனில் புதிய அலுவலகம் அமைக்க ரூ.7,500 கோடி மதிப்பிலான பிரமாண்ட கட்டிடத்தை கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது.

தற்போது கூகுள் நிறுவனம் அதே கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் 6,400 ஊழியர்களைக் கொண்டுள்ள கூகுள், விரைவில் அந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஊழியர்கள் வசதியாக பணிபுரியும் வகையில், புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக, அதன் வளாகத்தில் காற்றோட்டத்துடன் வேலை செய்ய புதிய வசதிகள் செய்யப்பட உள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!