பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள இராமநாதபுரம் காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சாமி ராஜகுரு. பட்டதாரி வாலிபரான இவர் சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் தெருவை சேர்ந்த 4ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி நடந்ததை பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த  புகாரின்பேரில்   ஆய்வாளர் மாரீஸ்வரி  வழக்கு பதிவு செய்து பட்டதாரி வாலிபர் சாமிராஜகுருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!