குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவுத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் நேற்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ராணுவ முழு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த அதிகாரிகள் உடல்களுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கடினமான நேரத்தில் அனைத்து மக்களும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள், ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து மிண்டு வர பலத்தையம், தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டும் என விழைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.