குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவன் கைது

 

 

சேலம் மாவட்டம் ஓமலூர்  அருகே குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர் காலனியைச் சேர்ந்த லட்சுமணன், சரண்யா தம்பதிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சரண்யா திடீரென இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது சகோதரருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த அவர், சரண்யா இறப்பில் மர்மம் இருப்பதாக தீவட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

லட்சுமணனைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடிபோதையில்  தகராறு ஏற்பட்டபோது, மனைவியை அடித்துக் கீழே தள்ளி கழுத்தை நெரித்ததாக வாக்குமூலம் அளித்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!