எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா

குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியி ருப்பதாகவும் வரும் செய்திகள்ந மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

இந்த விபத்தின் போது 500க்கும் அதிகமான நபர்கள் ஆற்றில் விழுந்ததாக வரும் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்ய குடும்பத்தினர்களுக்கும், அவர்களுடைய நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைந்திடவும், ஆற்றிலிருந்து மீட்கப்பட வேண்டிய எஞ்சியுள்ள அனைவரும் விரைவில் உயிருடன் காப்பற்றப்படவேண்டும் என்றும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

Translate »
error: Content is protected !!