62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

 

இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.

இதன்படி இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல்  20 ஓவர் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலேயே தடுமாறியது. 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களே சேர்த்தது.

 

 

Translate »
error: Content is protected !!