நட்சத்திர ஓட்டல் மேலாளரை மிரட்டல்.. நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

சமூக வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் கடந்த 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியரை கொலை மிரட்டல் மற்றும் ஆபாச வார்த்தைகள் பேசியதாக அவர் மீது வழக்குகள் இருந்தது.

இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக எழும்பூர் போலீசார் நேற்று 30 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நட்சத்திர ஓட்டல் மேலாளரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை மீரா மிதுன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

Translate »
error: Content is protected !!