ஜெய் பீம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் – சரத்குமார் பேட்டி

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார்,

அறிவுடையோர் கருணை உள்ளத்தோடு பிறருக்கு கொடுக்கும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும் என கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகளால் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறுவது வருத்தத்துக்குரிய ஒன்று எனவும், இதனை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் ஜெய்பீம் திரைப்படம் ஒரு நல்ல சிறந்த திரைப்படம் எனவும், அதனை அரசியல் ரீதியாக விமர்சிப்பது சரியானது அல்ல எனவும் சரத்குமார் தனது கருத்தைப்பதிவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!