ஜம்மு காஷ்மீர்.. உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தற்போது தங்கியிருந்த நீதிமன்ற அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு பணியில் இருந்த ஊழியர்களில் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்று பரவியுள்ளதா என்று சோதிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று புதிதாக 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 122 பேர் காஷ்மீரிலும், 28 பேர் ஜம்முவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!