மண்சரிவில் குட்டிகளுடன் புதைந்த நாய் – காப்பாற்றிய இளைஞர்

கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் குட்டிகளுடன் புதைந்த நாயின் அழுகுரல் காண்போரை கண்கலங்க செய்கிறது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே 6 குட்டிகளை ஈன்ற தாய் நாய் ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது

அப்போது அப் பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதில் தாய் நாய் தன்னுடைய 6 குட்டிகளுடன் மண்சரிவில் சிக்கி கொண்டது.

இதனால் வலியால் துடித்த அந்த நாய் கதறி கதறி அலறியது. நாயின் அலறல் சத்தத்தை கேட்ட அஷ்ரப் என்ற இளைஞர் தலை மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் புதைந்திருந்த தாய் நாயையும் இரண்டு குட்டிகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக மண்ணில் புதைந்த 4 குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. தன் குட்டிகளை இறந்ததைக் கண்டு தாய் நாய் கண் கலங்கியது.

மேலும் இரண்டு குட்டிகள் மற்றும் தாயை பிரிந்து காப்பாற்றிய அஷ்ரப்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!