வட மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடத்தல்

வட மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடத்தபட்டதை தொடர்ந்து சிறுமியின் தந்தை தமிழ்நாடு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு தமிழ்நாடு காவல் துறை ரயில்வே காவல்துறைக்கு டேக் செய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு காவல் துறை கோவை மாநகர காவல்துறையை எச்சரிக்கை செய்துள்ளது.

கடத்தல் கும்பலை பிடிக்க கோவை காவல் ஆணையர் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாநகர காவல்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே காவல்துறையுடன் ஒன்றிணைந்து கடத்தல் கும்பலை நோட்டமிட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!