கழிவுநீர் கால்வாயில் இருந்து ஆண் சடலம் மீட்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கழிவுநீர் கால்வாயில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கழிவுநீர் கால்வாயில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகேயுள்ள வெள்ளைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன், பழைய போலீஸ் லைன் தெருவில் உள்ள கால்வாயில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!