இன்ஸ்டாகிராம் நட்பினால் ஏற்ப்பட்ட விபரீதம்

 

சென்னையில் இன்ஸ்டாகிராம் நட்பை கைவிட மறுத்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை கணவர் சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அயானவரத்தை சேர்ந்தவர் ராகேஷ்.

இவரது மனைவி ஸ்வேதாவிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் சத்ய கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பை கைவிடும்படி ராகேஷ் பலமுறை கண்டித்தும்  இருவரும் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், நேற்று தனது மனைவி செல்போனிலிருந்து சத்ய கண்ணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி கோயம்பேடு பேருந்து நிலையம் வரவழைத்துள்ளார்.

அங்கு நண்பர் மற்றும் மனைவியுடன் சென்ற ராகேஷ், இருவரும் தொடர்பை துண்டித்துக்கொள்ள சொன்னபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை ஸ்வேதாவின் முதுகில் குத்தியதோடு, தடுக்க வந்த சத்ய கண்ணனின் கழுத்திலும் குத்திவிட்டு தப்பியுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார்  ராகேஷ் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!