இஸ்ரேலில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா, மலாய் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டது. மேலும் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, நோய் பரவாமல் தடுக்க இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டவுடன், எல்லைகளை மூடிய முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். இஸ்ரேல் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!