2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

UTS செயலி மூலம் ரயில்களின் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!