பருவமழை தொடங்கியதால் சம்பா சாகுபடி பணிகள் தொடக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், கீழையூர், திருமணங்குடி வாழக்கரை உள்ளிட்ட பகுதிகளில்  சம்பா பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களை பாடியபடி நடவு பணிகளில் ஈடுபட்டனர்.

Translate »
error: Content is protected !!