தொடர் மழை எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 700 கனஅடி தண்ணீர் அப்படியே மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மணிமுக்தா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.