தமிழக மக்களே உஷார்.. அடுத்த 12 மணி நேரத்தில், மீண்டும் ஒரு புயல் சின்னம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி 11ம் தேதி காலை வடகிழக்கு பகுதியை அடையும். நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதன்பின், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!