குற்றாலம் அருவியில் டிசம்பர் 20ம் தேதி முதல் குளிக்க அனுமதி

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரம்மியமான வானிலை நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 2வது ஆண்டாக தற்போது வரை அமலில் உள்ளது.

தற்போது குற்றாலம் அருவியில் டிசம்பர் 20ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!