நெருங்கும் பசும்பொன் தேவரின் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளன்று தேவரின் குருபூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம்

அந்த வகையில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு 114 வது ஜெயந்தி விழா மற்றும் 53 ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது

இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் நோய் பரவலை தடுப்பது குறித்தும், குருபூஜை ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

Translate »
error: Content is protected !!