பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தல்..

சாத்தான்குளம் அருகே பேய்குளம் ரேஷன் கடையிலிருந்து பட்டப்பகலில் ஆம்னி வேனில் ரேசன் அரிசி மூடைகளை கடத்திய சம்பவம் குறித்து வட்ட வழங்கல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பஜாரில் உள்ள ரேசன் கடையில் இன்று மர்மநபர்கள் ஆம்னி வேனில் ரேசன் அரிசி கடத்திக்கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சாத்தான்குளம் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையில் ரேசன் அரிசி கடத்திய வேன் அங்கிருந்து புறப்பட்டது. அதனை இளைஞர்கள் பைக்கில் துரத்திச் சென்றனர். இதனையடுத்து வேனை நடுக்காட்டில் விட்டு விட்டு அரிசி கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் வட்டாட்சியர் தங்கையா ஆகியோர் வேனை சோதனையிட்டனர். அதில் 50 கிலோ கொண்ட 20 ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தை கைப்பற்றிய வருவாய்த்துறை மற்றும் வட்ட வழங்கல் துறையினர் மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!