கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

வேலூர் நகைக்கடையில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது. தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள பிரபல தங்க நகை கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15-ம் தேதி 15 கிலோ மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக வழக்கு பதிந்து மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நகைக் கடையில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. நகைகள் உருக்கப்பட்டு ஒடுக்கத்தூர் அருகே சுடுகாட்டில் மறைக்கப்பட்டிருந்ததாகவும், அவை தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைதாகிய நிலையில், மேலும் 9 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Translate »
error: Content is protected !!