கேரளாவின் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவின் 5 மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மற்றும் திரிசூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!