குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் 21 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின விழாவிற்கு தேர்வு செய்யப்பட்ட அலங்கார வாகனங்கள் ராஜபாதையில் வலம் வந்தன. சத்தீஸ்கர், மராத்தி, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து 21 அலங்கார வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுத்துச் சென்றன.

Translate »
error: Content is protected !!