போலீசாரை தாக்கிய ரவுடிகள் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். தளவாய்புரத்தை சேர்ந்த எஸ்.ஐ விமலா பொங்கலன்று ஆலங்குளத்தில் வசிக்கும் சகோதரியை சந்தித்துவிட்டு பைக்கில் திரும்பியுள்ளார். அப்போது சுரண்டை செல்லும் வழியில் சிலர் சாலைக்கு நடுவே நின்றதால் அவர்களை ஓரமாக நிற்கும்படி சொன்ன போது ஆத்திரமடைந்த அவர்கள் பெண் எஸ்.ஐ என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் பெண் போலீசை தாக்கிய 4 பேரை கைது செய்தனர். அதில் வேல்முருகன் என்பவர் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்………

Translate »
error: Content is protected !!