வியாபாரியை கத்தியால் வெட்டி 20 லட்ச ரூபாய் வழிபறி

அண்ணா சாலையில் வியாபாரியை கத்தியால் வெட்டி 20 லட்ச ரூபாய் வழிபறி செய்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் இளையான்குடி கன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன்(28). இவர் அதே பகுதியில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். நேற்று பூபாலன் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்ச ரூபாய் பணத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள கிங் பேலஸ் விடுதியில் அறை எடுத்து தங்கிய பூபாலன் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் தனது நண்பரின் இருசக்க வாகனத்தை வாங்கி கொண்டு பணத்துடன் ராயப்பேட்டையில் உள்ள மற்றொரு நணபர் வினோத் என்பவரை பார்க்க சென்றுள்ளார்.

அண்ணாசாலை எஸ்பிஐ வங்கி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த பூபாலனை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் இடது கையை வெட்டி விட்டு பூபாலன் கையில் இருந்த 20 லட்ச ரூபாயை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றது. இதில் காயமடைந்த பூபாலன் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் பூபாலன் இது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து வழிபறியில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Translate »
error: Content is protected !!