‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவித் திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்பது தான் இத்திட்டம். விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் மற்றும் சிகிச்சைக்கு அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

Translate »
error: Content is protected !!