10 ஆயிரத்திற்கும் மேல் போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் அருகே 10000-க்கும் மேல் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி எஸ்பி தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் அனுமந்தராயன் கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக 6 நபர்களை கைது செய்த போலீசார் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!