நீலகிரியில் கடுமையான உறைபனி

நீலகிரியில் கடுமையான உறைபனி, பூஜ்ஜிய டிகிரியை நெருங்கும் வெப்பநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தலைக்குந்தா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பச்சை பசேலென காட்சியளிக்கும் புல் மைதானங்களில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறை பனி படர்ந்து காணப்படுகிறது.கடந்த மூன்று நாட்களில் 5, 2 என வெப்பநிலை இருந்து வரும் நிலையில் இன்று ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் ஜீரோ டிகிரியை வெப்பம் நெருங்குவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகாலை வேளையில் நெருப்பை மூட்டி உறை பனியை சமாளித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!