இந்தியாவில் இதுவரை 53.31 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயைக் கண்டறிய சோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 53,31,89,348 ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!