ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம்

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பங்குனி மாதம்  உத்திர நட்சத்திரம் அன்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான திருக்கல்யாண உற்சவமானது ஆடிப்பூர கொட்டகையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்றது. கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர அதனை பெற்றுக்கொண்டனர்.

இதைதொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நிகழ்வு நடந்தது.

 

Translate »
error: Content is protected !!