நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முககவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி. சானிடைசர்ஸ் பாட்டில், தெளிவாக தெரியக்கூடிய குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடைபெற இருப்பதால், ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில், கொரோனா தொடர்பான சில விவரங்களை பூர்த்தி செய்ய தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இருந்ததா?, நோய் அறிகுறி இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா? என்பது உள்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதனை தேர்வர்கள் முறையாக பூர்த்தி செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் மையத்துக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து வரத் தொடங்கலாம் என்றும், 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும், அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!