குற்றால அருவிகளில் வரும் 31 ஆம் தேதி முதல் குளிக்க தடை – தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குற்றால அருவிகளில் வரும் 31.12.2021முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 2ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சின்ன அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வழிகாட்டுதல்களை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!