விழுப்புரம் – நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து, 35; இவரது அண்ணன் சீனுவாசன், 42; இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது வந்தது. நேற்றிரவு 8:00 மணிக்கு ஏற்பட்ட நிலத்தகராறில், சீனுவாசன், அவரது மனைவி வாசுகி, 35; மற்றும் மைத்துனர் சதாசிவம், 56; ஆகிய மூவரும் சிவக்கொழுந்து தலையில் மரக்கட்டையால் அடித்து தாக்கினார்கள்.

இதனையடுத்து  சிவக்கொழுந்தை அந்த தகராரிலிருந்து மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர், இறந்துவிட்டதாக கூறினர். உடனே சீனுவாசன் உள்ளிட்ட மூன்று பேரையும் மரக்காணம் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சிவக்கொழுந்துவிற்கு கங்கம்மாள் என்ற மனைவி, ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Translate »
error: Content is protected !!