மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை

 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் தந்தையே அவரது 8 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்த  நேரு என்பவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவரது 8 வயது மகளிடம் தந்தையான நேரு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தையின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நேரு வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து வந்த சிறுமியின் தாய் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Translate »
error: Content is protected !!