அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தம்

சென்னையில் கடந்த வாரம் பெய்து வந்த கன மழையால் மாநகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில். மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி, கடந்த சில நாட்களாக காலை, மதியம், மாலை என இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு இன்று முதல் மீண்டும் மலிவு விலையில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!