மீஞ்சூரில் உயரழுத்த மின் கம்பி சரிந்து விழுந்ததில் மூன்று பேர் காயம்.. இருவரிடம் போலீசார் விசாரணை

மீஞ்சூரில் உயரழுத்த மின் கம்பி சரிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், கட்டிடம் இடிக்கப்பட்டபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி கீழே விழுந்தது. அதில் பூக்கடை வைத்திருந்த இரண்டு பெண்களும், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் என மொத்தம் மூன்று பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மாடசாமி மற்றும் ஜேசிபி ஓட்டுநர் நாகராஜ் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!