பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு…!

நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் நவம்பர் 1-4 தேதி 18,000 போலீசார் பாதுகாப்பு பண்ணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, சென்னையில் காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 383 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் 683 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!