நெல்லை: பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம், காயமுற்ற 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அர உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்த விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி டி விஸ்வாஞ்சன், கே அள்பழகன் மற்று ஆர். கதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன மேலும் எம். இசக்கி பிரகாஷ், எஸ் சஞ்சய் ஷேக்கு அடிபக்கர் கித்தாளி மற்று அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதை பற்றி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் கொண்டதோடு உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ப இலட்சம் ரூபாயும். காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு த மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரிய பொது நிவாரண நிதியிலிரு உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

Translate »
error: Content is protected !!