நண்பனை வெட்டி கொன்ற கொடூர வாலிபர் – என்ன நடந்தது?

திருவள்ளூரில் நண்பனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் ஜேஜே நகரில் வசித்து வந்தவர் முருகன். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருடன் அப்பு என்கிற சுபாஷ்சந்திரபோஸ் பணிபுரிந்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென்று இரவு முருகன் தனது வீட்டில் இருந்தபோது அவருடன் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த அப்பு, தனியாக பேச வேண்டும் என்று வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். முருகனும் அதை நம்பி அப்புவுடன் தனியே சென்றுள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டிருக்கிறார் அப்பு. இந்த திடீர் தாக்குலில் படுகாயம் அடைந்த முருகன் வலியில் துடித்து தப்பியோடியுள்ளார். ஆனால் வெறி அடங்காத அப்பு, முருகனை ஓட ஓட விரட்டிச் சென்று தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், முருகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!