சினிமா ஆசை காட்டி பெண்களுக்கு வலை வீசிய போலி டைரக்டர் கைது

தூத்துக்குடியில் சினிமா ஆசை காட்டி பல பெண்களை ஏமாற்றிய ஊழி டைரக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சக்தி கடந்த 40 நாட்களுக்கு முன் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரத்தில் 7 லாட்ஜ்களில் அறைகள் முன்பதிவு செய்தார்.

நான் சினிமா டைரக்டர் என்று கூறிவந்த சக்தி தனுஷ்கோடிக்கு சென்று கார்த்திக் ராஜா என்பவரை சந்தித்து பூசாரி வேடத்தில் நடிக்க ஆள் தேவை என்றும் அதற்கு சம்பளம் ரூபாய் 10 லட்சம் என்று கூறி ஆசை காட்டியுள்ளார்.

இந்த ஆசைக்கு மயங்கிய கார்த்திக் ராஜாவும் தன்னுடைய மனைவியும் நடிக்க வைக்க வேண்டும் என சக்தியிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய போலி டைரக்டர் சக்தி சினிமா எடுக்க படம் குறைவாக இருப்பதாக கூறி ஒரு லட்சம் தருமாறு கார்த்திக்கிடம் கேட்டுள்ளார் தன் மனைவி எப்படியாவது நடித்து விடுவாள் என்பது நம்மில் கார்த்திக்கும் அவரிடம் ஒரு லட்சத்தை கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலி டைரக்டர் சக்தி கார்த்திக்கை தான் தங்கியிருந்த ரூமுக்கு வர சொல்லி உள்ளார் அப்போது அங்கு சென்ற கார்த்திக் ராஜா அங்கு ஏற்கனவே இருந்த வெளிமாவட்ட பெண்ணை சந்தித்தார்.

அப்போது அந்தப் பெண் சக்தியை நம்ப வேண்டாம் எனவும் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி என்னை போல் பல பெண்களை ஏமாற்றி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக் ராஜா தனது பணத்தை கொடுக்குமாறு கூறி டைரக்டர் சக்தி இடம் கேட்டு உள்ளார் ஆனால் சக்தியோ பணத்தைத் திருப்பித் தராமல் துப்பாக்கியால் கார்த்திக் ராஜாவை மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த கார்த்திக்ராஜா அந்த ரூமில் இருந்து வெளி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போலி டைரக்டர் சக்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!