விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் – பிரதமர் மோடி அழைப்பு

சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் மறுமலர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த விவேகானந்தர், நாட்டை மீண்டும் கட்டமைக்கும் பணியில் இளைஞர்களை தூண்டியதையும் நினைவுகூர்ந்தார். நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!