காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் வீரவணக்கம்

பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்தப்படி, இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் காவலர் வீரவணக்க நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு – உறக்கம் – இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!