சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பரவலாக மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் பரவலாக பெய்த மழையால் காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்தால் நனையாமல் இருக்க இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையோர நிழற்குடைகளில் காத்திருந்து விட்டு, மழை நின்றதும் சென்றனர்.

மெரினா கடற்கரையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவி வருகிறது.

Translate »
error: Content is protected !!