பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை- இருக்கைக்குள் ஒளிந்துகொண்ட பயணிகள்

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் தட்டபள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் பழனியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கோத்தகிரிக்கு  வந்து கொண்டிருந்தபோது கீழ் தட்டபள்ளம் பகுதியில் யானை ஒன்று திடீரென பேருந்தை கண்ணாடியை உடைத்தது.  பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்து  இருக்கைகள்  ஒளிந்து கொண்டனர் பின்பு யானை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. பின்பு ஓட்டுநர் சர்வேஸ்வரன், நடத்துனர் வினோத் ஆகியோர்   பயணிகளை பத்திரமாக கோத்தகிரிக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!