அண்ணா பல்கலைக்கழகத்தில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் புரொஜக்டர்கள் கொள்ளை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டிடத்தின் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சென்னை கோட்டூர்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’ கட்டடத்தை சுத்தம் செய்வதற்காக பல்கலைக்கழக ஊழியர் முத்துக்குமார் நேற்று அங்கு வந்தார். அப்போது அந்த கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயில் கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே போய் பார்த்தபோது அங்குள்ள வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த 41 புரொஜக்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த புரொஜக்டர் மாணவர்களுக்கு திரையில் வகுப்புகள் எடுப்பதற்காக பயன்படுத்தப்படுவது ஆகும். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி குணசேகரன் புகார் அளித்துள்ளார். போலீசார் அங்கு விரைந்து சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருடுபோன புரொஜக்டர்களின் மொத்த மதிப்பு ரூ. 16 லட்சம் என போலீசார் சார்பில் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!