அமெரிக்காவில் திடீர் துப்பாக்கி சூடு..!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடந்த  துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் இறந்தனர், 2 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் ஊரடங்கில் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இண்டியனா மாகாணத்தின் தலைநகரான இண்டியனாபொலிஸ் நகரத்தில் காலை 2 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அதில் 2 பேர் இறந்தனர், 2 பேர் காயமடைந்தனர்.

இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இசம்பவம் நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்ச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!