அரசு நலத்திட்ட உதவிகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம் தேனி கலெக்டர் பேட்டி

அரசின் நலத்திட்டங்கள் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் என  தேனி கலெக்டராக நேற்று மாலை பொறுப்பேற்ற .வீ. முரளிதரன் தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த இவர் 2003 குரூப் 1 தேர்வு மூலம் அரசு பணியில் சேர்ந்தார். இவர் இதற்கு முன் வேளாண் வணிக விற்பனை துறை இயக்குனராக பணியாற்றினார். இவர் தேனி மாவட்டத்தின் 17 வது கலெக்டர் ஆவார்.இவர் நிருபர்களிடம் கூறுகையில் அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து நிலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க தீவிரமாக பணியாற்றுவேன். மக்களை சந்திக்க நானே அனைத்து பகுதிக்கும் செல்வேன். மக்கள் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம் என்றார்.

Translate »
error: Content is protected !!